வீரமுனை படுகொலையின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம் - நினைவுத் தூபிக்கு விளக்கேற்றி அஞ்சலி

வீரமுனையில் 1990-08-12ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 25ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆலயத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மாலை இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர், உயிர் நீத்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனை முன்னிட்டு இன்று வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பெருமளவான உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

1990ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்போது வீரமுனை கிராமத்தினை சூழவுள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம், வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.

1990-08-12ஆம் திகதி இந்த அகதி முகாம்களுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 95க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் காணாமல்போயினர்.

.DSC 0005

DSC 0006

DSC 0009

DSC 0010

DSC 0030

DSC 0036

 

அதிகம் வாசித்தவை